தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

முதல் இரயில் பயணம்

கார்த்திகேயன், கத்தர்

அகவை ஆறிரண்டில் ஆரம்பம்!
ஒரு பக்கம் அகண்ட காவேரி!
மறு பக்கம் தார்ச்சாலை!
வேகமாய் மறைந்தன மின்கம்பங்கள்!
மோதியது காற்று முகத்தின் மீது இனிதாய்!
முழுவதும் காண்பதர்க்குள் மறைந்த சிற்றூர்கள்!
இத்தனையும் ரசிக்க முடியாமல்!
தடுத்தது ......!
ஊரை விட்டு ஒடிவந்த எண்ணங்கள்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

நான் - கட்டாந்தரையாய்

பாண்டித்துரை

தேவைகள் !
வரும்போது !
தேடிவரும்... !
இல்லையெனில் !
புல் முளைத்தாலும் !
மேய்ந்து செல்லும் !
ஜந்து அறிவு ஜீவனினும் !
கேவலமாய் !
காலடித்தடம் பட்ட !
கட்டாந்தரையாய்.. !