தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நாடகமாய்

செண்பக ஜெகதீசன்

முன் அனுபவங்களை !
மேலுக்குத் தெரியாமல் மறைத்து, !
நாலு சுவர்களுக்குள் நடக்கும் !
நாடகம்தான்- !
முதலிரவு என்பது…!!

சமீபத்திய கவிதை

என் முனியம்மா

புதிய மாதவி

பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.

இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

- புதிய மாதவி, மும்பை

குறிப்பில்லாக் கவிதை (random)

பசியடங்கா மனிதன்

தோழன் மபா

நீ !
நேற்றுவரை !
துள்ளித் திரிந்திருப்பாய்.!
ஓடி !
விளையாடியிருப்பாய்.!
மிட்டாய்க்காக!
முகம் மலர்ந்திருப்பாய்.!
இன்றுன்னை!
கொன்றதாரென்று!
அறிந்திருப்பாயா....?!
ரசாயனக் குண்றென்றார்!
விஷவாயுவென்றார்.!
அரசு ராணுவமென்றார்!
கிளர்ச்சியாளர் கூட்டமென்றார்!
கொன்றது!
எப்படியாயினும்!
யாராகினும் !
கொல்லப்பட்டது!
நீதானே....?!
மனிதன் தின்ற!
மழலைகளின் !
மாமிசம் !
என்றேன் !
நான்.!
இன்னும்!
பசியடங்கா !
மனிதன் -இருந்தால்!
வரலாம்!
சிரியாவுக்கு!
பசியாற...?!
!
குறிப்பு: சிரியா டாமஸ்கசில் அரசு ராணுவத்தினரால் விஷ வாயு குண்டு வீசிக் ஒன்றுமறிய மழலைகள் கொல்லப்பட்டுள்ளனர். . இத் தாக்குதலில் சுமார் 1500 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர்.!
அந்த குமுறலே எனது கவிதையாக வெளிவந்துள்ளது