சிறையா - செண்பக ஜெகதீசன்

Photo by Julian Wirth on Unsplash

உங்களுடையது என்று !
நீங்கள் !
உரைப்பவை எல்லாம் !
உங்களுடையவை அல்ல, !
அதிலும் !
உங்கள் பிள்ளைகள் !
நிச்சயமாய் !
உங்களுடையவை அல்ல, !
அவை !
உலகின் பிள்ளைகள், !
உலக வாழ்வின் பிள்ளைகள்- !
உங்கள் வழியே !
வந்திருந்தால் கூட…! !
உடல்கள் !
உங்கள் வீட்டில் !
உங்கள் கூடவே இருக்கலாம், !
அவற்றில் !
உள்ள எண்ணங்கள் இருப்பதில்லை !
உங்களுடனே, !
உள்ளன அவை நாளை உலகில்- !
அது !
உங்களுக்குப் பிடிபடாது, !
அதனால் !
சுயமாய்ச் சிந்திக்க விடுங்கள் !
சிறுசுகளை, !
சிறைப்படுத்தவேண்டாம் சிந்தனையை !
உறவுகளைக் காட்டி…!!
அழிந்தாலும்…!
கோலங்கள் !
அழியத்தான் செய்யும் !
காலில் பட்டு, !
அழியுமென்று தெரிந்தே !
அழகாய்ப் படைக்கிறோமே !
அதுதான் கலை, !
அதற்கு இல்லை விலை…!!
!
-செண்பக ஜெகதீசன்…
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.