கைமண்.. கல்லடியாய்.. வேறுபாடற்றது - செண்பக ஜெகதீசன்

Photo by FLY:D on Unsplash

கைமண் அளவாய்… கல்லடியாய்… வேறுபாடற்றது…!
01.!
கைமண் அளவாய்…!
------------------------------!
!
கற்றது!
கைமண்ணளவு என்றார்கள்,!
அதனால்தான் அவள்!
படிப்பைப்!
பாதியில் நிறுத்திவிட்டு!
படி ஏறுகிறாளோ-!
சித்தாளாக…!!
02. !
கல்லடியாய்…!
-----------------------!
கல்லடிபடும் என்பார்கள்!
காய்த்த மரம் என்றாலே,!
இங்கே!
காய்க்காத மரம் ஏனோ!
கல்லடிபடுகிறதே…!
மரத்தின் குற்றமல்ல இது,!
மரத்துவிட்ட!
மனித மனத்தின்!
மாறாட்டம்தான் இது…!!
03.!
வேறுபாடற்றது…!
-------------------------!
ஏட்டப்பனின் தாயும்!
கட்டபொம்மனின் தாயும்!
காட்டிய அன்பினில்!
கட்டாயம் இருக்காது,!
கடுகளவு வேறுபாடு…!!
!
-செண்பக ஜெகதீசன்…
செண்பக ஜெகதீசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.